News August 15, 2024
பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த குற்றவாளி கைது

சென்னை திருமங்கலம் அருகே பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியான மணிரத்தினம், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் தனது கூட்டாளி சுனில் குமார் உடன் திருமங்கலம் சாலையோரம் அருகே பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்தபோது, போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
சென்னை: செல்லப் பிராணிகள் வளர்போர் கவனத்திற்கு!

சென்னையில் தெருநாய்கள், நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுக்க, ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம். இதற்கான பணிகள், மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில், கடந்த அக்.8 முதல் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றன. நவ.23க்குள் உரிமம் பெறாவிட்டால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம், டிச.7 வரை 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
சென்னை: அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் சில அத்தியாவசிய மருந்துகள் தற்காலிகமாக கிடைக்காமல் உள்ளன. மாநில மருத்துவ சேவை அமைப்பு சில மருந்துகளின் வழங்கலை நிறுத்தியதால், மருத்துவமனைகள் தற்போது அவசியமான மருந்துகளை தனியார் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் மருந்து பெறுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News November 22, 2025
சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை கொளத்தூர் சேர்ந்த 23 வயது பெண், கடந்த 19ம் தேதியன்று இரவு புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். புகாரின் பேரில் M-3 புழல் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சிசிடிவி பதிவுகள் மூலம் 15 வயது சிறுவனை கைது செய்து, நேற்று சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.


