News August 15, 2024
பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த குற்றவாளி கைது

சென்னை திருமங்கலம் அருகே பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியான மணிரத்தினம், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் தனது கூட்டாளி சுனில் குமார் உடன் திருமங்கலம் சாலையோரம் அருகே பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்தபோது, போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் நேற்று (30.11.2025) இரவு 11.00 மணி முதல் இன்று (டிச.01) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News November 30, 2025
சென்னையில் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு!

அன்புமணி தான் பாமக தலைவர் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் வரும் டிச. 2-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிச 4-ம் தேதி டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
சென்னை: ‘காமுக’ முதியவருக்கு காப்பு

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் அண்ணாநகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் முத்தம் கொடுப்பது உட்பட பல்வேறு விதமாக சைகை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பெயரில் திருமங்கலம் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசன் (64) என்பவரை, நேற்று கைது செய்தனர்.


