News March 3, 2025
படகு சவாரி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் வருகை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செருதூர் வெள்ளாறு பாலம் அருகில் படகு சவாரி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் நாளை (04.03.2025) காலை 07.45 மணி அளவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரதாபராமபுரம் மற்றும் பூவைத்தேடி கடற்கரையில் சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற சுற்றுலா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். என்பதனை மாவட்ட ஆட்சியர் தகவல் அறிக்கையில் தெரிவித்தார்.
Similar News
News October 23, 2025
நாகைக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களுக்கு பருவமழையை முன்னிட்டு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை தமிழக அரசு நியமித்து உள்ளது. அவ்வகையில் நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் அ.அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாகை மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியருடன் இணைந்து மேற்கொள்வார்.
News October 23, 2025
நாகை: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே நேற்று மாலை சுமார் 47 வயது மதிக்கத்தக்க அடையாளம் ஆண் சலடம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News October 23, 2025
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.