News August 16, 2024
பஞ்சாயத்து தலைவர் டிஸ்மிஸ்: கலெக்டர் அதிரடி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் இரா.குத்தாலிங்கராஜன் (எ) கோபி என்பவர் ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.
Similar News
News November 7, 2025
குற்றாலம் டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாலையில் வல்லம் சிலுவை முக்கு பகுதியில் காசி மேஜர்புரம் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது வல்லத்திலிருந்து சிலுவை முக்கு நோக்கிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. கடுமையான வேகத்தில் சென்ற மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக பலியானார். குற்றாலம் போலீசார் விசாரணை.
News November 7, 2025
தென்காசி முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று ரேணுகா பதவியேற்றுக் கொண்டார் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
News November 7, 2025
தென்காசி: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

தென்காசி மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0462-2576265. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.


