News February 7, 2026

பஞ்சப்பூர்: காய்கறி சந்தைக்கு ரூ.100 கோடி நிதி

image

பஞ்சப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை கட்டுமான பணிகளுக்கு, முனிசிபல் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதற்கு, மும்பை பங்குசந்தை வாயிலாக பத்திரங்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், 3 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் ரூ.100 கோடி மாநகராட்சிக்கு நிதி வரப் பெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 11, 2026

BREAKING: திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

image

கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கூட்டணி கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளார்.

News March 11, 2026

திருச்சி: TNPSC குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 1 தேர்வு மையத்தில் முற்பகலில் 356 பேர், பிற்பகலில் 368 பேர் என மொத்தம் 724 எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வறைக்குள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வரக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

EPS வருகை; முன்னாள் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

image

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். இந்நிலையில் அவரை வரவேற்க முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்கூட்டியே அனுமதி கடிதம் வழங்காததால், அவர்களை விஐபி அறைக்குள் அனுமதிக்க முடியாது என விமான நிறைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!