News April 14, 2025
பச்சிளம் ஆண் குழந்தை சடலம்; தாய் கைது

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது நிலத்தில் நேற்று டிராக்டரில் உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியானது. இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அதில், அந்த நிலத்தின் அருகே வசிக்கும் மேகலா(39) என்பவருக்கு கடந்த 10ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், அதை விவசாய நிலத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News September 17, 2025
தி.மலை: மழையால் மின்தடையா? கவலை வேண்டாம்!

தி.மலை மக்களே! மழைக்காலம் தொடங்கி விட்டதால், இனிமேல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். சில சமயங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும். இது குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் என்ற 9498794987 எண்ணை தொடர்வு கொள்ளவும். இல்லையெனில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <
News September 17, 2025
தி.மலை: ஒரு செயலி போதும்! அத்தனை பிரச்னைகளும் தீர்வு

“மெரி பஞ்சாயத்து” மொபைல் செயலி மூலம் கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாகப் பதிவு செய்யலாம். இதில் உள்ள ‘Grievance/Complaint’ பிரிவில் பெயர், கிராமம் மற்றும் புகார் விவரங்களை உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம். புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். ஷேர்
News September 17, 2025
தி.மலையில் கரண்ட் கட்!

தி.மலை, செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை (செப்.,18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கம் டவுன், திருவள்ளுவர் நகர், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகர், மேல்செங்கம், வளையாம்பட்டு, நீப்பத்துறை, காயம்பட்டு, அரசங்கன்னி, நீப்பத்துறை, ஆண்டிப்பட்டி, பரமனந்தல், குப்பநத்தம் & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.