News March 29, 2025
பங்குனி மாத வெள்ளிக்கிழமை தாயாருக்கு விசேஷ பூஜைகள்.

காஞ்சிபுரம் – திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் (28 மார்) வெள்ளிக்கிழமை மண்டல பூஜைகள் நடைபெற்று பங்குனி மாத வெள்ளிக்கிழமை தாயாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி மலர் அலங்காரங்கள் அர்ச்சனைகள் தீபா ஆராதனை நிகழ்வை தொடர்ந்து பிரசாதங்கள் வழங்க சுற்றுலா வாசிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Similar News
News April 18, 2025
காஞ்சிபுரம் ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும்போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘RAIL MADDED’ என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜர் வீதி பின்புறம் உள்ள சேக்குபேட்டை பகுதியில், பயன்பாட்டில் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கிணற்றில், நேற்று (ஏப்ரல் 17) மாலை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
News April 17, 2025
குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பான கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.