News March 26, 2025

பங்குனி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நிரல்

image

அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18  பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.

Similar News

News August 11, 2025

சாத்தூரில் ரூ.13 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

image

விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் 2 நாட்களுக்கு முன் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை வெற்றிலையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வீடு வீடாக நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News August 11, 2025

திருத்தங்கல் அரசு பள்ளியில் மோதல்

image

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து தாக்கிக்கொண்ட சம்பவம் சகமானவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு மாணவர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பிய வைத்தனர். இதே பள்ளியில் கடந்த மாதம் போதையில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

News August 11, 2025

காரியாபட்டியில் அமைச்சரின் அறிவிப்பு என்னாச்சு

image

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் சிகிச்சைக்காக சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது மகப்பேறு மருத்துவர் இங்கு உடனடியாக நியமிக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை மருத்துவர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

error: Content is protected !!