News March 26, 2025

பங்குனி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நிரல்

image

அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18  பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.

Similar News

News December 22, 2025

சிவகாசி: பள்ளி மைதானத்திலே கஞ்சா விற்பனை!

image

சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனே அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்ற கண்ணகி காலனியை சேர்ந்த பால்ராஜ்(20), தினேஷ்குமார் 26, வினோத்ராஜா 21, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய சிவகாசி அய்யப்பன் காலனியை சேர்ந்த விக்னேஷ்வரன் (எ)விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

News December 22, 2025

விருதுநகர்: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

image

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News December 22, 2025

விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

image

வன்னியம்பட்டி அரசியார்பட்டியைச் சேர்ந்தவர் மாரிசங்கர்(24). மாரிசங்கருக்கும் அவரது தாத்தாவுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் மாரி சங்கர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஶ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!