News April 21, 2025
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 28, 2025
ராமநாதபுரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமான மழை பெய்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
News November 28, 2025
பாம்பன் பகுதி மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

பாம்பன் பகுதியில் புயல் காரணமாக கனமழை மற்றும் 60 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலையில், பாம்பன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலோசை எப்எம் 90.4 உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து பாம்பு பகுதி மக்களுக்கு பேரிடர் உதவிகள் தேவைப்படுவோருக்கு பிரத்தியேக எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி வேண்டியவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை ரயில்கள் இயங்காது

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் ரயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


