News March 25, 2025
பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சிக்கான விண்ணப்பம் வருகிற 13ஆம் தேதி வரை பயிற்சி நிலையத்தில் ரூ.118 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் கூட்டுறவு மேலாண் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 18, 2025
நாமக்கல்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

நாமக்கல் Tata COATS நிறுவனத்தில் Welders பணிக்காக 20 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ முடித்த ஆண் நபர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு 01.01.2026 கடைசி தேதி ஆகும்.
News December 18, 2025
ப.வேலூர் அருகே தந்தை கண்டித்ததால் நடந்த அதிர்ச்சி!

ப.வேலூர் அருகே பூசாரிபாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த தினேஷ் (28). மதுப்பழக்கம் காரணமாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கடந்த 14ம் தேதி விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 18, 2025
நாமக்கல்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!


