News August 9, 2024
பகவதி அம்மன் கோவிலில் புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை 12-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, கட்டுகளாக குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் நெற்பயிர் கட்டுகளை கோவில் மேல்சாந்தி தலையில் சுமந்து அம்மனுன் முன் படைத்து பூஜை செய்வர். அடுத்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
Similar News
News October 24, 2025
குமரியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது எப்படி?

நாகர்கோவில் ஆயுதப்படை சாலையில் அருள்ஜீவன் என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து குட்கா கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் பேரில் எஸ்.ஐ. ஜெஸி மேனகா கேரளா சென்று குடோனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா, 2 கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
News October 24, 2025
குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்

தெற்கு ரயில்வே செய்திகுறிப்பு: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் 12666 கன்னியாகுமரி ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து அக்25ம் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படுவது விருதுநகர், மானா மதுரை, காரைக்குடி திருச்சி Jn. வழியாக செல்லும். மேலும் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ஜங்ஷன் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது
News October 24, 2025
குமரி மாவட்ட விவசாயிகள் வேதனை

குமரி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடியான கன்னிப்பூ சாகுபடி கடந்த மே மாதம் தொடங்கியது. இதில் 5,600 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதுவரை 5000 எக்டேரில் நெல் அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. 600 எக்டேரில் அறுவடைப் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது என அதிகாரிகள் கூறினர்.


