News December 5, 2024
நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

நொய்யல், காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டை மங்கலம், குந்தாணி பாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இன்று பூக்களை ஏலம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டுமல்லி கிலோ ரூ.1600க்கும், சம்பங்கி பூ ரூ.160க்கும், அரளிப்பூ ரூ.300க்கும், ரோஜாப்பூ ரூ.220க்கும், முல்லைப்பூ ரூ.1100க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News October 26, 2025
கரூர்: சிலிண்டர் மானியம் வருகிறதா?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிகலாம்.SHARE பண்ணுங்க
News October 26, 2025
கரூர்: 41 குடும்பங்களை நாளை சந்திக்கிறார் விஜய்!

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தவெக தரப்பில் 20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் ஓட்டலில் நாளை விஜய் சந்தித்து பேசுகிறார். மேலும் காயமடைந்தவர்களுக்கும் அவர் நிவாரணம் வழங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது
News October 26, 2025
இரட்டை வாய்க்கால் அருகே மது விற்ற நபர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் காலனி அடுத்த வெள்ளமடை பகுதியைச் சேர்ந்தவர் வைரன் மகன் அய்யர் 52. கூலித் தொழிலாளியான இவர் சேப்ளாப்பட்டி இரட்டை வாய்க்கால் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் மது விற்ற அய்யர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.


