News August 16, 2024
நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

கரூரைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் முடித்து இன்று மாலை ஊர் திரும்பினர். மண்டபம் முகாம் பூந்தோன்றி காளி அம்மன் கோயில் அருகே சென்றபோது பெங்களூரிலிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 10 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
ராமநாதபுரம் மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
அச்சத்தில் திருவாடனை பகுதி மக்கள்

திருவாடானையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வட்டிடுராதா தெருவில் ஏ.டி.எம். முன் நாய்கள் மக்களை அச்சுறுத்துகின்றன. இரவு நேரங்களில் சாலையை கடக்கும் நாய்களால் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பொதுமக்கள், உள்ளாட்சி அதிகாரிகள் நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 13, 2025
ராமநாதபுர மக்களே இந்த APP ரொம்ப முக்கியம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், எதிர்பாராத விதமாக அதீத மழை, புயல் பாதிப்பு, மோசமான வானிலை காலங்களில் மக்களை எச்சரிக்கும் வகையிலும், உள்ளூர் வானிலை தொடர்பான உடனடி தகவலை வழங்கும் வகையிலும் தமிழக அரசு TN ALERT என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. <