News March 21, 2024

நெல்லை: வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்

image

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று யாரும் வந்து மனு தாக்கல் செய்யவில்லை, போலீசாரின் சோதனை மட்டுமே நடைபெற்றது.

Similar News

News December 6, 2025

நெல்லை: டிகிரி போதும்., ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் <>இங்கு க்ளிக்<<>>செய்து விண்ணபிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News December 6, 2025

நெல்லை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

image

சீவலப்பேரி பொட்டல் பச்சேரி பகுதியை சேர்ந்த அந்தோனி மகன் மிக்கேல் (47). விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்ட உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 6, 2025

நெல்லை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

நெல்லை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!