News March 21, 2024

நெல்லை: வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்

image

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று யாரும் வந்து மனு தாக்கல் செய்யவில்லை, போலீசாரின் சோதனை மட்டுமே நடைபெற்றது.

Similar News

News October 15, 2025

நெல்லை ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

திருநெல்வேலி கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 24 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சொந்தஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News October 15, 2025

நெல்லை: தீபாவளி வசூல் வேட்டை – போலீசார் கண்காணிப்பு

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அரசுத்துறைகளில் பரிசுப் பொருட்கள் மற்றும் வசூல் வேட்டை தவிர்க்க மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல்களை திரட்டி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசு துறைகளை கண்காணித்து சோதனை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

News October 15, 2025

நெல்லையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (அக்.14) மேலப்பாளையத்தில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குவிந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!