News April 3, 2025
நெல்லை வழியாக கட்சிக்குடா ரயில் இயக்க வலியுறுத்தல்

நெல்லை வழியாக நாகர்கோவில் – கச்சிகுடா இடையே இயக்கப்பட்ட வாராந்திர பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் அல்லது ஆந்திர மாநிலம் சரளபள்ளிக்கு நெல்லை வழியாக இயக்கப்படும் ரயிலை இருவழிப் பாதையில் இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 9, 2026
மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 9 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 9, 2026
நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் பெற? இதை பண்ணுங்க!

நெல்லை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News February 9, 2026
துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்; வனத்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் வனச்சரக்க பகுதிகளில் வாழும் கிராம மக்கள் நாட்டு துப்பாக்கி அல்லது அனுமதி இல்லாத கள்ள துப்பாக்கிகளை வைத்திருந்தால் தாமாக முன்வந்து வரும் 20 ஆம் தேதிக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


