News April 3, 2025

நெல்லை வழியாக கட்சிக்குடா ரயில் இயக்க வலியுறுத்தல்

image

நெல்லை வழியாக நாகர்கோவில் – கச்சிகுடா இடையே இயக்கப்பட்ட வாராந்திர பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, குமரி மாவட்டத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் அல்லது ஆந்திர மாநிலம் சரளபள்ளிக்கு நெல்லை வழியாக இயக்கப்படும் ரயிலை இருவழிப் பாதையில் இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 13, 2025

தூத்துக்குடி: மனைவி பிரிந்த சோகத்தால் கணவர் தற்கொலை

image

மானூர் அருகே அலவந்தான்குளத்தை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் பெல்கிஸ் (51). இவருக்கும் இவரது மனைவி அந்தோணியம்மாளுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துவந்தார். மனைவியை பிரிந்த சோகத்தில் பெல்கிஸ் கடந்த 10ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர் நெல்லை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News December 12, 2025

நெல்லை: திருநங்கைகள் கோஷ்டி மோதல்

image

பாளை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு திருநங்கைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலை, இரவு நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

News December 12, 2025

நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

திருநெல்வேலி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க.

error: Content is protected !!