News March 19, 2024

நெல்லை: ராமர் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளல்

image

பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 18) 3ஆம் திருநாள் விழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீராமர் அலங்காரத்துடன் அனுமன் வாகனத்தில் ராஜகோபால சுவாமி பெருமாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Similar News

News November 23, 2025

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

நெல்லை: 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்

image

மானூர் அலவந்தான் குளம் பகுதியை சேர்ந்த அருள் சேவியர் அங்குள்ள 11ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் அருள் சேவியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

News November 23, 2025

பாளை: இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம்

image

பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குளோபல் சித்த மருத்துவமனையில் வைத்து இலவச எலும்பு வலிமை பரிசோதனை முகாம் இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமிற்கு முன்பதிவு செய்ய 93456 00723 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!