News April 28, 2025

நெல்லை: ரயில்வேயில் உடனடி வேலை

image

திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News April 28, 2025

நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகரில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை இரவு நேரத்தில் உதவி ஆணையர்கள் தலைமையில் இரவு நேரத்தில் ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளது. திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி சந்திப்பு பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்கள் வாரியாக காவல் ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

News April 28, 2025

நெல்லை: உயிரழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்.27) மாலை கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.28) அறிவித்துள்ளார்.

News April 28, 2025

மாற்றுப் பணியில் சென்று ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் விடுத்துள்ள சுற்றறிக்கைபடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்று பணி மூலம் பணிபுரிய உத்தரவு பெற்று சென்ற அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் மீண்டும் சேர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!