News April 24, 2025
நெல்லை- மும்பை கோடை ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை வழியாக கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மே.8 முதல் ஜூன்.26 வரை வியாழக்கிழமை தோறும் பகல் 1:30 மணிக்கு குமரியில் புறப்படும். மறு மார்க்கத்தில் புதன்கிழமை தோறும் மே.7 முதல் ஜூன்.25 வரை மும்பையில் இருந்து புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News December 8, 2025
நெல்லை: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

பாளை பொட்டல் கரையிருப்பு பகுதியில் நேற்று அடுத்தடுத்து ரூ.1 கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தாழையூத்து நிதீஷ் குமார், கங்கைகொண்டான் சுரேஷ் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுரேஷ்குமாரின் தந்தை கலைஞர் என்பவரை போலீசார் தேடிய நிலையில் அவர் விஷம் அருந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலி கேரள பதிவு கொண்ட கார் கைபற்றப்பட்டது.
News December 8, 2025
நெல்லை: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை ரெடி

நெல்லை மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் இங்கு <
News December 8, 2025
நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

சிவந்திபட்டி, பழைய பேட்டை, கூடங்குளம், வள்ளியூர், திசையன்விளை, கோட்டை கருங்குளம்,களக்காடு, பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 9) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. குத்துக்கல், டவுன், வாகைகுளம், இடிந்தகரை, இருக்கன்துறை, ஏர்வாடி, அப்பு விளை, குமாரபுரம், முடவன் குளம், மாவடி, குறுக்குத்துறை இதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மனி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.


