News April 26, 2025
நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!
Similar News
News November 19, 2025
நெல்லை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நெல்லை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் நெல்லை மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளலாம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதில் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News November 19, 2025
பாளையங்கோட்டையில் கிரேன் மோதி பெண் உயிரிழப்பு

மகிழ்ச்சி நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி செல்வி வயது 54. இவர் இன்று காலை மகிழ்ச்சி நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். கிரேனை ஓட்டி சென்றவர் ஹெட்போன் மாட்டிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து கிரேன் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
நெல்லை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

நெல்லை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<


