News April 26, 2025

நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

image

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!

Similar News

News November 22, 2025

நெல்லை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து<<>> Grievance Redressal, திருநெல்வேலி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News November 22, 2025

நெல்லை: 2002ம் SIR-ஐ தெரிந்துகொள்ள QR கோர்டு சேவை

image

நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் இந்த பணிகளில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள பல்வேறு இணைய சேவைகள் வழங்கப்பட்டாலும் திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகம் புதிய QR கோர்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் பயன் பெறலாம்.

News November 22, 2025

நெல்லை: கிணற்றுக்குள் விழுந்து மாணவர் பலி.!

image

தச்சநல்லூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (19) கல்லூரி 2ம் ஆண்டு படித்த நிலையில் நேற்று நண்பருடன் கரையிருப்பில் உள்ள கிணற்றுக்கு சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் விக்னேஸ்வரன் கிணற்றில் விழுந்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் விக்னேஸ்வரனை மூன்று மணி நேரமாக தேடிய நிலையில் தற்போது சடலமாக மீட்கபட்டார்.

error: Content is protected !!