News January 24, 2025

நெல்லை மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வீரவநல்லூரில் சமூக வலைத்தளத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சினை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட வீரவநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் என்ற நபரை வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். சமூக வலைதளத்தில் பிரச்சனையை தூண்டும் வகையில் யார் வீடியோ வெளியிட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

நெல்லை: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

நெல்லை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE IT.

News December 6, 2025

நெல்லை: விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

image

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த முத்தரசு என்பவருடைய மகள் பரமேஸ்வரி (28). இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்தார். அவரை மீட்டு பாளை ஜகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரசிங்கபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News December 6, 2025

நெல்லை போலீசின் பாராட்டை பெற்ற டீக்கடைகாரர்

image

சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (57) என்பவர் 30.11.2025 அன்று தனது கடையின் முன்பு, ஒரு பேக்கில் ரூ. 2,50,000/- பணம் கேட்பாரற்று நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அந்த பேக்கை எடுத்து, உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வந்து நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார். இன்று எஸ்பி சிலம்பரசன் நேரில் பாராட்டினார்.

error: Content is protected !!