News April 28, 2025

நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகரில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை இரவு நேரத்தில் உதவி ஆணையர்கள் தலைமையில் இரவு நேரத்தில் ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளது. திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி சந்திப்பு பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்கள் வாரியாக காவல் ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

Similar News

News December 15, 2025

நெல்லை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

திருநெல்வேலி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

நெல்லை: வக்கீலிடம் 16 பவுன் நகை திருட்டு

image

குமரியை சேர்ந்தவர் வக்கீல் அகஸ்தீசன்(41) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நெல்லை வாலிபர் கடன் கேட்டுள்ளார். அது தொடர்பாக நெல்லை வந்த வழக்கறிஞர் லாட்ஜில் தங்கியுள்ளார். இவரிடம் நேரில் சென்று பேசிவிட்டு வாலிபர் பணம் வாங்கி சென்றுவிட்டார். அதன் பிறகு வக்கீல் வைத்திருந்த 16 பவுன் நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்து பின் பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் கைதாகினார்

News December 15, 2025

நெல்லை: தொழிலாளிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

image

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் அவரது உறவினர் முருகன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே வெங்கடேசை 4 பேர் கும்பல் வெட்டி சாய்த்தது. படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பேட்டை போலீசார் வழக்கு பதிந்து முருகன் (19) என்பவரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!