News April 28, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகரில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை இரவு நேரத்தில் உதவி ஆணையர்கள் தலைமையில் இரவு நேரத்தில் ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளது. திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி சந்திப்பு பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்கள் வாரியாக காவல் ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
Similar News
News September 18, 2025
மனநல நிறுவனங்கள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; விரைவில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் ஆகியவை முறையாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.
News September 18, 2025
நெல்லையில் 186 புதிய வாக்கு சாவடிகள்

நெல்லை மாவட்டத்தில் 1,490 வாக்குச்சாவடிகளில் 375 பிரிக்கப்பட்டு, 186 புதியவை சேர்க்கப்பட்டு மொத்தம் 1,676 ஆக உயர்கிறது. 189 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். 26 இடங்கள் மாற்றம், 10 பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றியமைப்பு, 6 பள்ளிகளின் பெயர் மாற்றம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கருத்துகள், ஆட்சேபனைகளை ஒரு வாரத்தில் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டார் .
News September 18, 2025
நெல்லை: ரயில் நிலையத்தில் கொலை

நெல்லை ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு பயணிகள் 3 பேரை வாலிபர் தாக்கியதில் கோவை முதியவர் தங்கப்பன் உயிரிழந்தார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பீகார் மாநிலம் மண்டூலாவை சேர்ந்த சூரஜ் 25 என்பவரை போலீசார் விசாரிக்கின்றனர். அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் விழிப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக என சந்தேகிக்கின்றனர்.