News December 4, 2024
நெல்லை மாவட்டத்தில் 5 பிடிஓ-க்கள் இடமாறுதல்

நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 5 பிடிஓ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ விடுப்பில் உள்ள ராஜம் சேரன்மகாதேவிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியில் இருந்த முத்தையா நாங்குநேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜேஷ்வரன் மானூருக்கும், உமா களக்காட்டிற்கும், கண்ணன் அம்பைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
புயல் காரணமாக நெல்லை ரயில் ரத்து!

மோன்தா புயல் காரணமாக இணை ரயில் ரத்து செய்யப்பட்டதால் நெல்லை வழியாக இயக்கப்படும் பெங்களூர் சிட்டி நாகர்கோவில் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக பெங்களூருக்கு செல்லும் 30ஆம் தேதி விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே இந்நாளில் ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.*ஷேர்
News October 28, 2025
நெல்லை இரவு நேர காவலர்கள் விவரங்கள் இதோ…

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக். 28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News October 28, 2025
முதல்வரின் நெல்லை பயணம்; விரிவான அலசல்

முதல்வர் முக ஸ்டாலின் இன்றிரவு கோவில்பட்டியில் கருணாநிதி சிலையை திறக்கிறார். 10.30 மணிக்கு நெல்லை வருகிறார். அரியநாயகிபுரத்தில் தங்கி விட்டு நாளை காலை 11க்கு தென்காசி சீவநல்லூர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 11.30க்கு ஆனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 12.45க்கு அமர் சேவா சங்கம் செல்கிறார். பகல் 1:30க்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸ் வரும் முதல்வர் மீண்டும் மாலை மதுரை செல்கிறார்.


