News March 29, 2024
நெல்லை: மாயமான 8ம் வகுப்பு மாணவன் மீட்பு

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவர் கமலேஷ் மகேந்திரா நேற்று மாயமானார். இது குறித்த புகாரில், ஜெயேந்திரா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனை போலீசார் திவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டவுண் அருகே சுற்றிக்கொண்டிருந்த கமலேஷை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 6, 2025
நெல்லை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு..!

நெல்லை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 6, 2025
நெல்லை: வழுக்கி விழுந்த இளைஞர் பரிதாப பலி!

கங்கைகொண்டான் ஆலடிபட்டி பகுதியை சேர்ந்த முருகையா என்பவருடைய மகன் கருப்பசாமி (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளித்துவிட்டு வந்தபோது எதிர்பாரதவிதமாக டைல்சில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
News December 6, 2025
நெல்லையில் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

மத்திய அரசு மோட்டார் வாகன தகுதிச் சான்று கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 9 நள்ளிரவு முதல் 5,000-க்கும் மேற்பட்ட லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் சுமார் 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


