News March 29, 2024

நெல்லை: மாயமான 8ம் வகுப்பு மாணவன் மீட்பு

image

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவர் கமலேஷ் மகேந்திரா நேற்று மாயமானார். இது குறித்த புகாரில், ஜெயேந்திரா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனை போலீசார் திவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டவுண் அருகே சுற்றிக்கொண்டிருந்த கமலேஷை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News December 21, 2025

நெல்லை அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை அருகே கரையிருப்பை சேர்ந்தவர் தங்க கணபதி (50). இவரும் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் (50) என்பவரும் நேற்றிரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவரும் ஏற்பட்ட தகராறில் மூக்கன், தங்க கணபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தங்க கணபதியின் சகோதரர் குமரேசன், மூக்கனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News December 20, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.20) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில் குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News December 20, 2025

நெல்லை: வாக்காளர்கள் நீக்கம் விவரம் தெரிந்துகொள்ள CLICK!

image

நெல்லை மாவட்டத்தில், சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் விவரம் நேற்று (டிச 19) மாலை வெளியிடப்பட்டது. SIRக்கு முன் வாக்காளர் எண்ணிக்கை 14,18,325. SIRக்கு பின் வாக்களர் எண்ணிக்கை 1,203,368. நீக்கப்பட்ட வாக்காளர் எண்னிக்கை 2,14,957. நெல்லையில் 15.16 சதவீத வாக்களர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <>LINK<<>>ல் கிளிக் செய்யவும். இதனை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!