News March 29, 2024
நெல்லை: மாயமான 8ம் வகுப்பு மாணவன் மீட்பு

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவர் கமலேஷ் மகேந்திரா நேற்று மாயமானார். இது குறித்த புகாரில், ஜெயேந்திரா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனை போலீசார் திவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டவுண் அருகே சுற்றிக்கொண்டிருந்த கமலேஷை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 16, 2025
நெல்லை: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

திருநெல்வேலி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 16, 2025
நெல்லை முன்னாள் துணை மேயர் மறைவு

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக துணை மேயரும், தற்போதைய 30வது வார்டு கவுன்சிலருமான P.ஜெகநாதன் என்ற கணேசன் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவு குறித்து அதிமுக நெல்லை மாவட்ட செயலாளார் தச்சை N.கணேச ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.
News December 16, 2025
நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறுவர்கள் கைது

வி.கேபுரம் அருகே அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மதன் (21) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 சிறுவர்கள் மற்றும் மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுவன் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.


