News May 17, 2024

நெல்லை: பாட நோட்டுகள் விலை 10-20% வரை சரிவு

image

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 28, 2025

பாளை சிறையில் போக்சோ கைதி உயிரிழப்பு

image

மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). இவர் கடந்த ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 22ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

நெல்லை அரசு அலுவலகத்தில் வேலை ரெடி

image

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 6 வகையான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். என்றும் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நிரப்பப்பட உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News November 28, 2025

நெல்லை: 8 மாதத்திற்கு பின் கொலையாளி கைது

image

திருநெல்வேலி, முக்கூடல் பாப்பாக்குடி சேர்ந்த துப்புரவு தொழிலாளி பால்ராஜ் நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் தடுக்கி விழுந்து இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் பிணக்கூறாய்வு அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்யபட்டது. வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை 8 மாதங்களுக்கு பிறகு திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கொலையாளி சுரேஷ் (29) என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!