News April 16, 2025

நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்

image

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி கியூ.ஆர் கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!

Similar News

News November 28, 2025

நெல்லை: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

image

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 28, 2025

நெல்லை: வாக்காளர் பட்டியலில் 1.22 லட்சம் பேர் நீக்கம்?

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வரும் நிலையில், 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 946 வாக்காளர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். இதில் 69 ஆயிரம் பேர் இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் போன்று விபரங்களும் தெரியவந்துள்ளது.

News November 28, 2025

பாளை சிறையில் போக்சோ கைதி உயிரிழப்பு

image

மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). இவர் கடந்த ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 22ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!