News August 17, 2024
நெல்லை – தூத்துக்குடி ரயில் சேவை ரத்து

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும்.
Similar News
News September 17, 2025
மதுரை: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை <
News September 17, 2025
மதுரை – டெல்லிக்கு தினசரி விமான சேவை

மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே விமான சேவை இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் விமான நிறுவனம் டெல்லிக்கு தினசரி விமான சேவை அளிக்க உள்ளது அதன்படி தினமும் அதிகாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு அந்த விமானம் காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும், மறுமார்க்கமாக காலை 8:55 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:10 மணிக்கு டெல்லி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
News September 17, 2025
மதுரை: மழைக்காலங்களில் இந்த எண்கள் உதவும்

மதுரை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வரும் சமயத்தில், மரங்கள் சாய்வது, மின்கம்பிகள் அறுந்து விழுவது போன்ற இடர்பாடுகள் நடப்பது இயல்பாகியுள்ளது. ஆகவே, மதுரை மக்கள் அத்தகைய சூழலை எளிதில் அணுக அதற்கான எண்கள்:
▶️கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077
▶️மாவட்ட அவசர கட்டுப்பாடு அறை :0452 – 2546160
▶️வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) :98949 70066
▶️ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) : 0452 – 2533272 *SHARE IT