News March 24, 2025
நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
நெல்லை: பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் ரோகித் (26) நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உணவகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் சென்றபோது ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பைக்கில் வந்த மேலப்பாளையம் ஆதில் (20), கலீல் ரகுமான் (20) காயமடைந்தனர். இதுகுறித்து பாளை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 16, 2025
நெல்லை: டிகிரி போதும்.. ரூ.85,920 வரை சம்பளம்! APPLY NOW

திருநெல்வேலி மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <
News December 16, 2025
நெல்லை கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் பாஸ்கர் (36). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பாஸ்கர் மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாஸ்கர் நேற்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


