News March 24, 2025

நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை 

image

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News

News December 14, 2025

நெல்லை: 15 வயது சிறுமி உயிரிழப்பு!

image

சீவலப்பேரி அருகே பாலாமடை கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி பட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டார். உள்ளூர் சிகிச்சைக்குப் பின் நிலைமை மோசமடைந்ததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலைப் பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

நெல்லை: ECR ல் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே, நவ்வலடி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று (டிச.13) இரவு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த இருவர், திடீரென ஆத்தங்கரை பள்ளிவாசல் என்னுமிடத்தில், திடீர் விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

நெல்லை மக்களே மழை நேரத்தில் இது ரொம்ப முக்கியம்.!

image

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!