News March 24, 2025
நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
நெல்லை: நடந்து சென்ற ஊழியருக்கு ஏற்பட்ட சோகம்

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் உலகநாதன் (61). மரக்கடையில் பணி செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாலையோரம் நடந்து சென்று அந்த வழியாக வந்த பைக் உலகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்த அவர் நெல்லை G.H-ல் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 11) காலை உயிரிழந்தார். இது குறித்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
நெல்லை: பைக்கில் தவறி விழுந்து இளைஞர் பலி

நெல்லை டவுணை அடுத்த பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (18). இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை உயிரிழந்தார். பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 12, 2025
பாளை வாக்காளர்களே., மீண்டும் வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க…

இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, 226வது பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை இடம்பெறாத வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் சனி, ஞாயிறு (டிசம்பர் 13&14) ஆகிய தினங்களில், தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்


