News March 24, 2025
நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
நெல்லை: திருடச் சென்ற வீட்டில் குளியல் போட்ட வாலிபர்

மேல பாலாமடையை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டில் பட்ட பகலில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் அத்துமீறி நுழைந்து பீரோவில் இருந்த மூன்றாயிரம் ரூபாயை திருடியுள்ளார். மேலும், வீட்டில் குளியல் போட்டு, வீட்டிலிருந்த சட்டையையும் அணிந்து கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.
News December 19, 2025
நெல்லை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள்<
News December 19, 2025
நெல்லை: பெண் போலீஸ் மீது தாக்குதல்.. மாமியார் கைது

தச்சநல்லுார் போலீசில் சிறப்பு எஸ்.ஐயாக இருப்பவர் முருகானந்தம். இவரது மனைவி சந்தா. இவர்களது மகன் ஹபீஸ் (28) என்பவரும், பெண் போலீசும் காதல் திருமணம் செய்துள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக திருச்சியில் இருந்த பெண் போலீஸ், அண்மையில் பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சாந்தா, பெண் போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் சந்தா கைது செய்யப்பட்டார்.


