News March 24, 2025
நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
நெல்லை: வெடி தகராறில் கொலை மிரட்டல்

முனைஞ்சிபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரவிநாயகம் (37), திருமண வீட்டுக்கு வந்திருந்த போது பிள்ளையார் கோவில் அருகே வெடி போட்ட இளைஞர்களைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாறைக்கூட்டம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் கேசவன் அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்தார். சுந்தரவிநாயகம் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கேசவனைத் தேடி வருகின்றனர்.
News December 4, 2025
நெல்லை: இளைஞரிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி ராஜீவ் காந்தி நகரில் ரோந்து போலீஸார் சாக்குப்பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை விரட்டி பிடித்தனர். இப்ராஹிம் ரசீக் (22) என்பவரிடம் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய தங்கதுரையுடன் சேர்ந்து 5 கிலோ கஞ்சா வாங்கி 900 கிராம் விற்பனை செய்தது தெரியவந்தது. இப்ராஹிம் ரசீக்கை கைது செய்த போலீஸார் தங்கதுரையை தேடி வருகின்றனர்.
News December 4, 2025
நெல்லையில் அரசு வேலை! உடனே APPLY

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் காலியாக உள்ள MIS analyst என்கிற வெளி ஆதார முறைகளான ஒரு தற்காலிக பணியிடத்திற்கு மாதம் 25,000 ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென் பொறியாளர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


