News March 24, 2025

நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை 

image

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

நெல்லை: சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மாவட்டத்தில் அரசு தேர்வு துறை மூலம் மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை அனைவருக்கும் உரிய மேல்நிலை பொதுத்தேர்வு எழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாதவர்களுக்கு வருகிற ஜனவரி 10ஆம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கபட்டுள்ளது. அதன் பின்னர் அறிவிப்பு இன்றி அளிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே சம்பந்தபட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 14, 2025

நெல்லை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in என்ற<<>> இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE !!

News October 14, 2025

நெல்லை: கோழிக்கழிவுகள் விவகாரம் – ஒருவர் கைது

image

நெல்லை, மதவக்குறிச்சி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மர்ம நபர்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட கோழிகளின் உடல்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு மற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுக்குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டவுன் அண்ணா தெருவை சேர்ந்த பரத்மாரி என்பவர் கோழிக்கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. அவர் கைது செய்யபட்டார்.

error: Content is protected !!