News April 27, 2025
நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News January 7, 2026
நெல்லை மாநகரில் 89 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் கடந்த 2025 ஆம் ஆண்டு மொத்தம் 89 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக மாநகர காவல் துறை சார்பில் இன்று ஜன.6 தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 70 பேர் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைத்ததால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். பாலியல் மற்றும் இணையதள குற்றவாளிகள் தலா இருவர். 14 பேர் கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானார்கள்.
News January 7, 2026
நெல்லை வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மாவட்ட எஸ்பி பிரசன்ன குமார் இன்று ஜனவரி 6 விடுத்துள்ள செய்தி குறிப்பில்: நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கு பெற்றுக்கொண்டு வேறு நபர்களிடம் உரிமையாளருக்கு தெரியாமல் வாடகைக்கு விட்டு மோசடி செயல்களில் ஈடுபட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
News January 7, 2026
திருநங்கையர் விருது பெற கலெக்டர் அழைப்பு

2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கையர் விருதை தமிழக முதலமைச்சர் வழங்க உள்ளார் விருது பெரும் சாதனைகளுக்கு ரூ.1 லட்சம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் அரசு உதவி பெறாமல் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்கள் சிறந்த சேவை புரிதல் உள்ளிட்ட தகுதி உடைய நபர்கள் விண்ணப்பங்களை பிப்.18ஆம் தேதிக்குள் உரிய விவரங்களுடன் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.


