News March 27, 2025
நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன் படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.27] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் நிக்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
நெல்லை: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் பலி

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் கருங்குளம் எம்ஜிஆர் நகரில் உள்ள நாராயணன் மகன் கார்த்திக் என்பவர் வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதில் 5 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 22, 2025
நெல்லை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
நெல்லையில் கவுன்சிலர் மீது வழக்கு!

மேலப்பாளையம் பாத்திமாநகரைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட ஐ.டி. அணி செயலாளர் முகமது யாசர் அரபாத் (26), கட்சி அலுவலகத்தில் முகமது அன்சாரி (23) உள்ளிட்ட 4 பேரால் தாக்கப்பட்டார். தாக்குதலுகுட்பட்ட அவர் முகநூலில் வீடியோ வெளியிட்டு காப்பாற்றுங்கள் என கோரினார். அன்சாரியை போலீஸார் கைது செய்தனர். கவுன்சிலர் ரசூல் மைதீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


