News March 27, 2025
நெல்லை: இரவு ரோந்துப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன் படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [மார்ச்.27] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் நிக்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
நெல்லை: சவுதியில் சேவையாற்ற வாய்ப்பு – ஆட்சியர்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; 2026 ஆம் ஆண்டு புனித ஹச் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹச் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹச் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணி காலம் சுமார் 2 மாதம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் துணை ராணுவ படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
News November 7, 2025
அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பணியிட மாற்றம்

அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய துணை கண்காணிப்பாளர் சதிஷ்குமார் தர்மபுரிக்கு மாற்றபட்டுள்ளார். அம்பாசமுத்திரம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பிரச்சனைகளை பொறுமையாக கையாள்பவர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் கோவை மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 7, 2025
நெல்லை: கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – எஸ்.பி

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ் பி சிலம்பரசன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை சகஜமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. இத்தகைய செயல்களை தடுப்பதற்கு முதலில் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். எனவே கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.


