News May 16, 2024

நெல்லை: அரசுப் பள்ளியில் சேர கடும் போட்டி

image

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பில் மாணவிகள் அதிக மதிப்பெண்களை எடுத்து அபார சாதனை படைத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இங்கு மாணவிகள் சாதனை படைப்பதால் இங்கு சேர்வதற்கு மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக 11ஆம் வகுப்பு பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. விஐபிகள் பரிந்துரைக்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.

Similar News

News December 17, 2025

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு!

image

டிசம்பர் மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தற்போது மாற்றி வைக்கப்பட்டு 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.

News December 17, 2025

நெல்லை: கம்மி விலையில் கார், பைக் வேணுமா?

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டம் முன்னாள் படைவீர நல அலுவலகத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள வாகனம் வருகிற 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு படைவீரர் நல அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் வருகிற 24-ஆம் தேதி வரை நேரில் பார்வையிட்டு ஆதார் அட்டை உடன் முன்பணம் செலுத்தி பெயர் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News December 17, 2025

நெல்லை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!