News May 16, 2024
நெல்லை: அரசுப் பள்ளியில் சேர கடும் போட்டி

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பில் மாணவிகள் அதிக மதிப்பெண்களை எடுத்து அபார சாதனை படைத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இங்கு மாணவிகள் சாதனை படைப்பதால் இங்கு சேர்வதற்கு மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக 11ஆம் வகுப்பு பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. விஐபிகள் பரிந்துரைக்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
Similar News
News December 12, 2025
நெல்லை: திருநங்கைகள் கோஷ்டி மோதல்

பாளை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு திருநங்கைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலை, இரவு நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
News December 12, 2025
நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

திருநெல்வேலி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 12, 2025
நெல்லை: SIR-ல் முறைகேடு? அலுவலருக்கு பறந்த நோட்டீஸ்!

சேரன்மாதேவி மாஞ்சோலை ஊத்து பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு எழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அங்கு வாக்குச்சாவடி 102-ல் 63 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு ஒருவர் கூட வசிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 வாக்குச்சாவடி நிலைய அலுவலருக்கு விளக்கம் அளிக்க சேரன்மாதேவி சார் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


