News April 14, 2024

நெல்லையில் 61 நாட்களுக்கு தடை

image

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான கூத்தங்குழி உவரி, கூட்டபனை , பெருமணல், பஞ்சல், கூடங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாளை முதல் 61 நாட்களுக்கு ( ஏப். 15 ) கடலுக்கு செல்ல மாட்டார்கள்.  எனவே மீன்களின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News September 18, 2025

நெல்லை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்

image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தை சேர்ந்த தவசிக்கனி, மனைவி அன்னசெல்வத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தபோது, மது அருந்த பணம் கேட்டு அன்ன செல்வம் மறுத்ததால் ஆத்திரமடைந்த தவசிக்கனி, அவரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அன்ன செல்வம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுக்குறித்து களக்காடு போலீசார் விசாரணை.

News September 18, 2025

தென் மாவட்ட சிறப்பு ரயில்களுக்கு முன் பதிவு விறுவிறுப்பு

image

தீபாவளி பண்டிகை ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் ஏற்கனவே சென்னை – நெல்லை உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தன. இதையடுத்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கபட்டன. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக சென்னை – நெல்லை – நாகர்கோவில் ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டன மேலும் ஒரு ரயில் அறிவிக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

News September 18, 2025

நெல்லை அருகே ரயில்வே கேட் இன்று மூடல்

image

நெல்லை அருகே கங்கைகொண்டான் புளியம்பட்டி ரயில்வே கேட் (கிராசிங் எண் 9) பகுதியில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று 18ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையை பயன்படுத்தி ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!