News March 27, 2025

நெல்லையில் 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி

image

நெல்லை மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அதில் 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கான ஆணைகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.26) அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

Similar News

News December 4, 2025

நெல்லை: டிகிரி போதும்., ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News December 4, 2025

நெல்லை: வெடி தகராறில் கொலை மிரட்டல்

image

முனைஞ்சிபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரவிநாயகம் (37), திருமண வீட்டுக்கு வந்திருந்த போது பிள்ளையார் கோவில் அருகே வெடி போட்ட இளைஞர்களைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாறைக்கூட்டம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் கேசவன் அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்தார். சுந்தரவிநாயகம் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கேசவனைத் தேடி வருகின்றனர்.

News December 4, 2025

நெல்லை: இளைஞரிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

image

திருநெல்வேலி ராஜீவ் காந்தி நகரில் ரோந்து போலீஸார் சாக்குப்பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை விரட்டி பிடித்தனர். இப்ராஹிம் ரசீக் (22) என்பவரிடம் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய தங்கதுரையுடன் சேர்ந்து 5 கிலோ கஞ்சா வாங்கி 900 கிராம் விற்பனை செய்தது தெரியவந்தது. இப்ராஹிம் ரசீக்கை கைது செய்த போலீஸார் தங்கதுரையை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!