News September 28, 2024
நெல்லையில் 103 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு

நெல்லையில் நேற்று(செப்.27) 103 பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதியம் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயில் காரணமாக குளிர் பானங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இளநீர், நுங்கு மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வெயிலால் பொதுமக்கள், மாணவிகள் குடைகளுடன் செல்வதை காண முடிந்தது.
Similar News
News December 4, 2025
நெல்லை: டிகிரி போதும்., ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

நெல்லை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <
News December 4, 2025
நெல்லை: வெடி தகராறில் கொலை மிரட்டல்

முனைஞ்சிபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரவிநாயகம் (37), திருமண வீட்டுக்கு வந்திருந்த போது பிள்ளையார் கோவில் அருகே வெடி போட்ட இளைஞர்களைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாறைக்கூட்டம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் கேசவன் அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்தார். சுந்தரவிநாயகம் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கேசவனைத் தேடி வருகின்றனர்.
News December 4, 2025
நெல்லை: இளைஞரிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி ராஜீவ் காந்தி நகரில் ரோந்து போலீஸார் சாக்குப்பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை விரட்டி பிடித்தனர். இப்ராஹிம் ரசீக் (22) என்பவரிடம் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய தங்கதுரையுடன் சேர்ந்து 5 கிலோ கஞ்சா வாங்கி 900 கிராம் விற்பனை செய்தது தெரியவந்தது. இப்ராஹிம் ரசீக்கை கைது செய்த போலீஸார் தங்கதுரையை தேடி வருகின்றனர்.


