News April 17, 2025

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுற்று நீதிமன்றம்

image

நெல்லை ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மாற்றுத்திறனாளிகளுக்காக மே 29,30 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை ஏப்.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94999 33236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்

Similar News

News July 11, 2025

பாதிரியாரிடம் பணம், செல்போன் பறித்த கும்பல்

image

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அருள் சீலன், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரினச் சேர்க்கையாளர் கும்பலால் தாக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய், செல்போன், ஏடிஎம் கார்டுகள் பறிக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில், கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

News July 10, 2025

சிறுவன் மரணத்தில் பொய்யான தகவல் பரப்பினால் நடவடிக்கை

image

வடக்கன்குளம் பள்ளி விடுதியில் 7-ம் வகுப்பு மாணவன் சேர்மதுரை 8ம் தேதி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். பணகுடி போலீசார் விசாரணையில், நீரில் மூழ்கியதால் பலி என உறுதியானது. பெற்றோர் புகாரின் பேரில் விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பணப் பேரம் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மறுத்து, அவதூறு பரப்புவோர் மீது எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News July 10, 2025

கூடங்குளம் அருகே மினி வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

image

நெல்லை, கூடங்குளம் அருகே காமநேரியிலிருந்து கொத்தங்குளம் சென்ற மினி வேன், மாடு சாலையில் புகுந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!