News September 13, 2024

நெல்லையில் பட்டா மாற்ற உத்தரவு பெற வாய்ப்பு

image

நெல்லை நகர் பகுதியில் வருவாய் பின் தொடர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு பட்டா பெயர் மாற்றத்துக்கான விசாரணை அறிவிப்பு கடிதம் நில உரிமையாளர்களின் வீட்டிற்கு வந்து வழங்கப்படும். அவர்கள் உரிமையை நிலைநிறுத்த, விசாரணை நாளன்று சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாற்ற உத்தரவுகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 28, 2025

நெல்லை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கன மழை பெய்கிறது. இந்நிலையில் நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. SHARE IT.

News November 28, 2025

நெல்லை: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

image

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 28, 2025

நெல்லை: வாக்காளர் பட்டியலில் 1.22 லட்சம் பேர் நீக்கம்?

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வரும் நிலையில், 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 946 வாக்காளர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். இதில் 69 ஆயிரம் பேர் இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் போன்று விபரங்களும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!