News September 13, 2024
நெல்லையில் பட்டா மாற்ற உத்தரவு பெற வாய்ப்பு

நெல்லை நகர் பகுதியில் வருவாய் பின் தொடர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு பட்டா பெயர் மாற்றத்துக்கான விசாரணை அறிவிப்பு கடிதம் நில உரிமையாளர்களின் வீட்டிற்கு வந்து வழங்கப்படும். அவர்கள் உரிமையை நிலைநிறுத்த, விசாரணை நாளன்று சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாற்ற உத்தரவுகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 22, 2025
நெல்லை : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
நெல்லை – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

இன்று காலை 10.05 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் 56742 செங்கோட்டை – நெல்லை மதியம் 01.40 க்கு நெல்லையில் புறப்படும் 56743 நெல்லை – செங்கோட்டை ரயில்கள் இன்றும் (22.10.25,) நாளையும் (23.10.25) சேரன்மகாதேவி – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்.
News October 22, 2025
நெல்லை: பைக் மோதி ஒருவர் பலி

விக்கிரமசிங்கபுரம் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சக்தி வடிவேல் (57) மரக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த 16 ம் தேதி இரவு விக்கிரமசிங்கபுரம் சந்தனமாரியம்மன்கோயில் அருகில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர் சக்தி வடிவேல் மீது மோதியதில் பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.