News March 25, 2025
நெல்லையில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரலில் தொடக்கம்

நெல்லை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு கீழ் பாளையகோட்டை அண்ணா விளையாட்டு கக்கன் நகர் அருகே உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 908088 65 63 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 19, 2025
நெல்லை: இனி சாலையில் மாடுகள் திரிந்தால் ரூ.10000 அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா நேற்று கூறினார். சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை இனி வரும் காலங்களில் கைப்பற்றும் பட்சத்தில், மாடுகளுக்கு முதல் முறை ரூ.5000, இரண்டாவது முறை ரூ.10000 வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
News November 19, 2025
நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நவ.21 அன்று காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என வேலை வாய்ப்பு துறை உதவி இயக்குனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
நெல்லையில் காட்டு யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

மாஞ்சோலை அருகே கோதையாறு வனப்பகுதியில் அரிகொம்பன், புல்லட் ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று காட்டு யானைகள் வேறு பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் நேற்று திடீரென ஒரு காட்டு யானை பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் ராதாகிருஷ்ணன் யானை தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


