News March 25, 2025
நெல்லையில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரலில் தொடக்கம்

நெல்லை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு கீழ் பாளையகோட்டை அண்ணா விளையாட்டு கக்கன் நகர் அருகே உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 908088 65 63 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 7, 2025
நெல்லையில் 20 நாள் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகம் வழியாக மேலப்பாளையம் பஸ் நிலையம் வரை செல்லும் வழித்தடத்தில் பாதாள சாக்கடை அமைக்கும்படி நடைபெறுவதால் 11ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 20 நாட்கள் இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. வாகனங்கள் தெற்கு புறவழிச் சாலை குறிச்சி சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குறிச்சி சந்திப்பு விஎஸ்டி ரவுண்டானா வழியாக வரவேண்டும்.
News November 7, 2025
நெல்லை: சவுதியில் சேவையாற்ற வாய்ப்பு – ஆட்சியர்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; 2026 ஆம் ஆண்டு புனித ஹச் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹச் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹச் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணி காலம் சுமார் 2 மாதம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் துணை ராணுவ படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
News November 7, 2025
அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பணியிட மாற்றம்

அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய துணை கண்காணிப்பாளர் சதிஷ்குமார் தர்மபுரிக்கு மாற்றபட்டுள்ளார். அம்பாசமுத்திரம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பிரச்சனைகளை பொறுமையாக கையாள்பவர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் கோவை மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


