News April 16, 2025

நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நெல்லை பெருமாள்புரம் சிதம்பர நகரில் உள்ள மாவட்ட தொழில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 17ஆம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கல்வி சான்றிதழ் ஆதார் அட்டை மற்றும் தங்களது சுய விவரங்களை வந்து பங்கேற்கலாம். மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News November 2, 2025

நெல்லை: பெட்ரோல்குண்டு வீசிய மேலும் 2 பேர் கைது

image

கடந்த சில நாட்களுக்கு முன்பு தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட 6 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தருவையை சேர்ந்த பாலாஜி, உடையார்புரத்தை சேர்ந்த சூர்யா ஆகிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2025

நெல்லை: தந்தையை வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்

image

களக்காடு பகுதியில் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 20 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பெண்ணின் தந்தை அவரின் செல்பேனை பறித்துள்ளார். இதனால் காதலியுடன் பேசமுடியாமல் ஆத்திரமடைந்த சுரேஷ் 6 பேருடன் சேர்ந்து பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய நிலையில் 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

News November 2, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.1] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!