News October 25, 2024

நெல்லையில் கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

image

5 ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவில் கால்நடைகள் கணக்கெடுக்கப்படுகின்றன. 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி இன்று (அக்.25) தொடங்க உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 188 கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 41 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முக மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 7, 2025

நெல்லையில் 20 நாள் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

image

நெல்லை கலெக்டர் அலுவலகம் வழியாக மேலப்பாளையம் பஸ் நிலையம் வரை செல்லும் வழித்தடத்தில் பாதாள சாக்கடை அமைக்கும்படி நடைபெறுவதால் 11ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 20 நாட்கள் இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. வாகனங்கள் தெற்கு புறவழிச் சாலை குறிச்சி சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குறிச்சி சந்திப்பு விஎஸ்டி ரவுண்டானா வழியாக வரவேண்டும்.

News November 7, 2025

நெல்லை: சவுதியில் சேவையாற்ற வாய்ப்பு – ஆட்சியர்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; 2026 ஆம் ஆண்டு புனித ஹச் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹச் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹச் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணி காலம் சுமார் 2 மாதம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் துணை ராணுவ படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

News November 7, 2025

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பணியிட மாற்றம்

image

அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய துணை கண்காணிப்பாளர் சதிஷ்குமார் தர்மபுரிக்கு மாற்றபட்டுள்ளார். அம்பாசமுத்திரம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த பிரச்சனைகளை‌ பொறுமையாக கையாள்பவர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் கோவை மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!