News April 27, 2025

நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி 

image

நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தை உள்பட4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஏர்வாடி போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Similar News

News September 19, 2025

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நெல்லை: அதிகாலையில் மனைவி வெட்டிக் கொலை

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பாட்டார். கொலை செய்யப்பட்ட கங்கைகொண்டான் ஆலடிப்பட்டியை சேர்ந்த பிரதிகா (20) உடலை கைப்பற்றி நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த கணவன் அன்புராஜை (24) சந்திப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 19, 2025

நெல்லை மாநகராட்சி பகுதிக்குள் செல்ல தடை!

image

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள வாகன முனையம் மற்றும் விற்பனைச் சந்தை வரும் 22ம் தேதி முதல் இயங்கும் என மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 22 ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான லாரிகள் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

error: Content is protected !!