News February 15, 2025
நெல்லையில் காங். கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

அரசியல் சாசனத்தை உருவாக்கி தந்தவர் அம்பேத்கர் காந்திக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. காந்தியத்தையே குழி தோண்டி புதைத்து விடுவார்கள். அம்பேத்கரை அழித்து விடுவார்கள். இன்று நாம் சொல்கிறோம், நம்மோடு பல தோழமைக் கட்சிகளும் சொல்கிறார்கள். என ப.சிதம்பரம் பேசினார். MLA ரூபி மனோகரன், தங்கபாலு, செல்வபெருந்தகை MLA ,எம்பி.ராபர்ட் புருஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 28, 2025
நெல்லை: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 28, 2025
நெல்லை: வாக்காளர் பட்டியலில் 1.22 லட்சம் பேர் நீக்கம்?

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வரும் நிலையில், 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 946 வாக்காளர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். இதில் 69 ஆயிரம் பேர் இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் போன்று விபரங்களும் தெரியவந்துள்ளது.
News November 28, 2025
பாளை சிறையில் போக்சோ கைதி உயிரிழப்பு

மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). இவர் கடந்த ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 22ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


