News May 17, 2024
நெல்லையில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News October 22, 2025
நெல்லை: நீர்வரத்து பகுதியில் ஆட்சியர் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சிற்றாறு மற்றும் குளங்களுக்கு வருகின்ற நீர்வரத்து பகுதிகளை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் சுகுமார் முக்கூடல் பகுதில் இன்று (அக்.21) பிற்பகல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
News October 22, 2025
தீபாவளி விதிமீறல் பட்டியலை வெளியிட்ட எஸ்பி

நெல்லையில் தீபாவளி பண்டிகையின் போது விதிமீறல் தொடர்பாக மொத்தம் 521 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 83, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 200, அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு நேர விதிமுறை மீறல் சம்பந்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <