News September 28, 2024
நெல்லையில் கனமழை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை, தேனியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.
Similar News
News November 19, 2025
பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்யும் பிரவீன் என்பவரிடம் சத்யாதேவி என்ற பெண் தன்னை சப் கலெக்டர் என கூறி அறிமுகமாகி அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பிரவீனிடம் 17 பவுன் நகை, 8½ லட்சம் பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் சத்யாதேவி மற்றும் செல்லத்துரை ஆகிய இருவர் கைதான நிலையில் சுரேஷ் என்பவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


