News April 27, 2025
நெல்லையில் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட சாலை

நெல்லை சந்திப்பிலிருந்து சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் செல்ல இன்று முதல் முடியாது. சமாதானபுரத்திலிருந்து கோர்ட் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சமாதானபுரத்திலிருந்து எஸ்.பி அலுவலகம் வழியாக கேடிசி நகர் செல்லலாம். கேடிசி நகரில் இருந்து சமாதானம் வருவதற்கு எந்த தடைகளும் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். *ஷேர் பண்ணுங்க
Similar News
News October 21, 2025
நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 21, 2025
நெல்லை: இன்று பிற்பகல் முதல் சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு இன்று கூடுதலாக 1 நாள் விடுமுறை அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்டு வெளியூர் பணிகளுக்கு செல்வதற்காக இன்று மாலை முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோவைக்கு தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.
News October 21, 2025
பழவூர் அருகே விபத்து; சிறுமி பலி

பழவர் அருகே டூவீலர் மீது நெல்லை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிரீட்டா என்பவரது கார் இன்று மோதியதில் ஜோசப்(65) என்வரின் பேத்தி வர்ஷா(14) சம்பவ இடத்திலே பலியானார். தீபாவளி நாளில் பேத்தியை அழைத்து தோட்டத்திற்கு செல்லும் போது விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபாவளி நாளில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.