News January 2, 2025
நெல்லையில் இருந்து திரும்பி அனுப்பட்ட 10 ஏசி பேருந்துகள்

திருநெல்வேலி-பாபநாசம்-தென்காசி இடையில் அரசு ஏ.சி. பேருந்துகள் ஓடியது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் வார நாட்களில் காலியாக பயணிக்கும் நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டலத்திலிருந்து 10 ஏசி பேருந்துகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
Similar News
News November 22, 2025
நெல்லையில் ரூ.14.77 கோடிக்கு அடிக்கல் நாட்டல்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி விஜயாபதி ஊராட்சியில் நேற்று (நவ. 21) காலை 10.45 மணிக்கு ரூபாய் 14.77 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மையம் அமைப்பதற்காக தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான C.ராபர்ட் புரூஸ் இணைந்து அடிக்கல் நாட்டினர். உடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
News November 22, 2025
நெல்லையில் ரூ.1.95 கோடியில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி, கூட்டப்புளி மீனவ கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில், மீனவப் பெண்களுக்கான, கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை அமைப்பதற்காக, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் நேற்று (நவ 21) காலை அடிக்கல் நாட்டினார்.
News November 22, 2025
நெல்லையில் ரூ.2.3 கோடியில் திட்டப் பணிகள்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், கூத்தன் குழி ஊராட்சி, கூத்தன்குழி மீனவக் கிராமத்தில், 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில், மீன்கள் இறங்கு தளம் அமைப்பதற்கான கட்டடப்பணிகளை, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு, இன்று (நவ 21) காலையில், அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ் தலைமை வகித்தார்.


