News January 24, 2025
நெல்லையில் இன்று மனித உரிமை ஆணையர் விசாரணை

வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் இன்று (ஜன-24) வழக்குகள் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
நெல்லை: இந்த எண்களை SAVE பன்னிக்கோங்க!

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்..
திசையன்விளை- 9384094224
சேரன்மகாதேவி- 9384094223
மானூா்- 9384094222
இராதாபுரம்- 9445000674
நாங்குநேரி- 9445000673
அம்பாசமுத்திரம்- 9445000672
பாளையங்கோட்டை- 9445000669
திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News November 5, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News November 5, 2025
பாளை: 21 நாட்களுக்குப் பின் உடல் ஒப்படைப்பு

காசி தர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (30). கூலித் தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிறைக் கழிவறையில் கடந்த 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் உடலை வாங்க மறுத்த நிலையில் பேச்சுவார்த்தையில் 21 தினங்களுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.


