News October 25, 2024
நெல்லையில் ஆளுநர் பங்கேற்கும் விழா நேரடி ஒளிபரப்பு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா நாளை(26 ஆம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இணையதள முகவரியை பல்கலைக்கழகம் இன்று(அக்.,25) வெளியிட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
ஆசிரியர் தகுதி தேர்வு 11,640 பேர் எழுதுகின்றனர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதில் முதல் தாள் 11 தேர்வு மையங்களிலும் இரண்டாம் தாள் 35 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 11,640 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப் பணியில் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
JUST IN கவின் கொலை வழக்கு; ஒருவருக்கு பிடிவாரண்ட்

திருநெல்வேலி நீதிமன்றத்தில் இன்று கவின் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. சுர்ஜித்தின் தாயான உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி அவரது கணவர் சரவணன் மகன் சுர்ஜித் உறவினர் ஜெயபாலன் ஆகிய நான்கு பேர் மீது நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. கிருஷ்ணகுமாரியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றதை தொடர்ந்து திருநெல்வேலி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
News November 14, 2025
நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<


