News March 18, 2024

நெல்லைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு டவுன் வாகையடிமுனையில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

திருநெல்வேலி முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பயிற்சி

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு விரைவில் களப்பணி தொடங்கும்.

News October 31, 2025

BREAKING நெல்லை: மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

image

நரசிங்கநல்லூர் பகுதியில் குடும்பத்தகராறில் இன்று மாமியார் வள்ளியம்மாளை(45) மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ளார். மோதல் சம்பவத்தை தடுக்கச் சென்ற வள்ளியம்மாளின் மகள் துர்காவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தாய், மகள் இருவரையும் வெட்டிய துர்காவின் கணவர் ஆறுமுக நயனாரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News October 31, 2025

பாரதியார் பிறந்தநாள் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பே.ரா.விடுத்துள்ள செய்தி குறிப்பு: பொதிகை தமிழ் சங்கம் சார்பில் மாநில அளவிலான பாரதியார் பிறந்தநாள் கவிதை போட்டிகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கவிதைகளை 36 வரிகளுக்குள் எழுதி வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் pothigaitamilsangam@gmail.com என்ற இணையதளத்தில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

error: Content is protected !!