News May 16, 2024
நெல்லைக்கு ரெட் அலர்ட்!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
நெல்லையில் கனமழை எதிரொலி; இன்று தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் இன்று (24.11.2025) நடைபெற இருந்த 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ம.சு.பல்கலைக்கழகம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். இதனை எல்லோருக்கும் ஷேர் செய்யவும்.
News November 24, 2025
நெல்லை: டிரைவர் தற்கொலை

திசையன்விளை அருகே இட்ட மொழி நன்னி குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் கண்ணன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீஸ் எஸ்ஐ பிரதீப் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
News November 24, 2025
BREAKING நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு . SHARE


