News October 23, 2024
நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
Similar News
News July 6, 2025
புளியால் அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

திருச்சியைச் சேர்ந்த கோபிநாத் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று தேவகோட்டை வட்டம் புளியால் அருகே சிலை மாநாடு என்ற இடத்தில் காரை ஓட்டி வரும்போது கார்நிலை தடுமாறி சாலையின் ஓரமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கோபிநாத் தாயார் உயிரிழந்தார்.
News July 6, 2025
ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 2025 மூன்றாம் வாரம் வரை மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 22 பேரூராட்சிகளில் 11 முகாம்களும் 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும் 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் நடைபெற உள்ளது.
News July 6, 2025
சக்தி வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன்

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள சத்ரு சம்ஹார வேல் கோயிலின் சிறப்பு. கடன், பிணி நீங்க, எதிரிகள் தொல்லை அகல, ராகு தோஷம் விலக இங்கு வழிபடலாம். பேசாத குழந்தைகள் பேச, பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர, நீதி பெறவும் இக்கோயில் பிரசித்தி பெற்றது. இதை *SHARE* பண்ணுங்க.