News October 23, 2024
நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
Similar News
News October 17, 2025
ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடை

தீபாவளி விடுமுறைக்காக ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் போது பட்டாசுகள், வெடி பொருட்கள், மண்ணெண்ணெய், சிலிண்டர் போன்ற தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ரயில்வே காவல் படை மோப்ப நாய்களுடன் சோதனை நடத்துகின்றனர்.
News October 17, 2025
டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த முக்கிய உத்தரவு

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2024- 2025 ஆண்டிற்கான ஊக்கத்தொகை மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவின் படி ( C, D) பிரிவு ஊழியர்கள் மற்றும் தகுதியுடைய கடை பணியாளர்களுக்கும் தீபாவளி போனசாக 20% வழங்கப்படும் இதன் மூலம் 24816 தகுதியுடைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
News October 17, 2025
சிவகங்கை: குருபூஜை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 224-வது நினைவு தின அரசு விழா, காளையார்கோவிலில் நினைவு அனுசரிப்பு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்வுகளின் போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புக்களைச் சார்ந்தோர் முறையாக பின்பற்றுவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகதத்தில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது.